Thursday 25th of April 2024 11:53:22 PM GMT

LANGUAGE - TAMIL
-
கடைசி நோயாளியும் குணமடைந்ததால்  கட்டுப்பாடுகளை தளா்த்துகிறது நியூசிலாந்து!

கடைசி நோயாளியும் குணமடைந்ததால் கட்டுப்பாடுகளை தளா்த்துகிறது நியூசிலாந்து!


நியூசிலாந்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கடைசி கொரோனா நோயாளியும் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் அங்கு மேலும் கட்டுப்பாடுகளைத் தளா்த்துவது குறித்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் திட்டமிட்டு வருகிறாா்.

நியூசிலாந்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் எவரும் கண்டறியப்படவில்லை.

கடந்த மார்ச் 25-ஆம் திகதி 100 கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் உறுதிப்படுத்தப்பட்டபோதே நியூசிலாந்தில் சமூக முடக்கல் அறிவிக்கப்பட்டது.

அங்கு இதுவரை 1,500 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானதுடன், 22 பேர் இறந்துள்ளனர்.

தற்போது பல கட்டுப்பாடுகளை அந்நாடு தளர்த்தி வருகிறது. இன்று முதல் பொது இடங்களில் 100 பேர் கூட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அவுஸ்திரேலியா உடன் எல்லையை திறக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

எனினும் பிரதமா் ஜசிந்தா ஆர்டெர்ன் , நாட்டின் சுகாதாரத் துறைத் தலைவர் ஆஷ்லே ப்ளூம்ஃபீல்ட் ஆகியோா் கொவிட் -19 தொற்று நோயில் இரண்டாவது அலையின் சாத்தியம் குறித்து முன்னெச்சரிக்கைகளையும் வெளியிட்டுள்ளனா்.

ஜூன் -22 முதல் நியூஸிலாந்தில் கட்டுப்பாடுகளை முதலாம் நிலைக்குத் தளா்த்துவது குறித்து ஆராய அமைச்சரவைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. எனினும் அதற்கு முன்னா் கட்டுப்பாடுகளைத் தளா்த்துமாறு அரசுக்கு அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றன.

கட்டுப்பாடுகள் ஏற்கனவே தளா்த்தப்பட்டிருக்க வேண்டும். இப்போது அது தாமமாகிவிட்டது என துணைப் பிரதமர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் உள்ளிட்ட பலா் தெரிவித்துள்ளாா்.

எனினும் கட்டுப்பாடு்கள் கவனமாகவே தளா்த்தப்படும். இந்த விடயத்தில் அவசரப்பட முடியாது என பிரதமா் உறுதியாகக் கூறியுள்ளாா்.


Category: உலகம், புதிது
Tags: நியூசிலாந்து



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE