அவுஸ்திரேலியாவில் மிக நீண்டகாலமாக செயற்பட்டுவந்த புலம்பெயர் செயற்பாட்டாளர் சபேசன் இன்று காலமானார். அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ண் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் முன்னாள் பொறுப்பாளராக அவர் நீண்டகாலம் செயற்பட்டுவந்திருக்கின்றார்.
தமிழ் மக்கள் முன்னெடுத்த போராட்டங்களில் முன்னின்று செயற்பட்டுவந்த அவர் எழுத்தாளராகவும் நீண்டகாலமாக அடையாளப்படுத்தப்பட்டிருந்தார்.
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புடன் நெருக்கமான தொடர்புகொண்டிருந்த அவர் கிளிநொச்சியில் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரையும் சந்தித்து பாராட்டுப் பெற்றிருந்தமை தொடர்பிான ஒளிப்படம் ஒன்றும் வெளியாகியுள்ளது.
அவருடைய பிரிவு தொடர்பில் அவுஸ்திரேலிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கவலை வெளியிடப்பட்டுள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: ஆஸ்திரேலியா