கிழக்கு சீனாவின் ஜெஜியாங் மாகாண நெடுஞ்சாலையில் இன்று சனிக்கிழமை மாலை திரவ நிலை எரிவாயு நிரப்பியவாறு சென்ற டாங்கா் லொறி வெடித்துச் சிதறியதில் 10 போ் பலியானதுடன், 117 போ் காயமடைந்தனா்.
வென்லிங் நகரில் உள்ள லியாங்சன் கிராமத்திற்கு அருகில் இன்று மாலை 4.40 மணியளவில் எரிவாயு லொறி வெடித்துச் சிதறியது. இதன்போது அதிவேக நெடுஞ்சாலையில் அருகிலுள்ள சில வீடுகள் மற்றும் தொழிற்சாலைகள் இடிந்து விழுந்தன.
வெடிப்புச் சம்பவத்தை அடுத்து சம்பவ இடத்தில் 34 தீயணைப்பு இயந்திரங்களுடன் 138 உள்ளூர் தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.
மீட்புப் பணிகளுக்கு உதவ மேலும் 316 தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாக அவசரநிலை முகாமைத்துவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மீட்புப் பணிகளை வழிநடத்த அவசரநிலை முகாமைத்துவ துணை அமைச்சர் சன் ஹுவாஷான் ஜெஜியாங்கிற்குவிரைந்துள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது.