கொரோனா வைரஸ் தொற்று நோயால் மூடப்பட்டிருந்த ரொரண்டோவில் உள்ள ரோயல் ஒன்ராறியோ அருங்காட்சியகம் 4 மாதங்களின் பின்னர் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை முதல் திறக்கப்பட்டுள்ள ரோயல் ஒன்ராறியோ அருங்காட்சியகத்தைப் பார்வையிடுவதற்கான நுழைவுச் சீட்டுகளை பெற இணையத்தின் ஊடாக முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ரொரண்டோவின் மற்றொரு அடையாளமாக சி.என். டவா் ஜூலை 15 புதன்கிழமை முதல் வாரத்தில் ஏழு நாட்கள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.