சென்னையில் ஐபிஎல் போட்டிகளுக்காக பயிற்சிப் பெற்று வரும் இந்திய அணியின் பிரபல நட்சத்திர வீரர் மகேந்திரசிங் தோனி இன்று மாலை தனது சமூகவலைத்தளப் பக்கத்தில் "உங்களுடைய அன்புக்கும் ஆதரவுக்கும் எப்போதும் நன்றி இன்று 7.29 மணி முதல் நான் ஓய்வுப்பெறுகிறேன்" என பகிர்ந்துள்ளார்.
குறித்த செய்தியை ஏஎன்ஐ செய்தி நிறுவனமும் உறுதிச் செய்துள்ளது.
இதனையடுத்து இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா தன்னுடைய சமூகவலைளத்தளப் பதில் "உங்களுடன் விளையாடிய நாட்கள் அருமையானவை. முழு மன திருப்தியுடன் நானும் உங்களின் வழியை தேர்ந்தெடுக்கிறேன், உங்களின் பயணத்தில் பங்கேற்கிறேன்.
இந்தியாவுக்காக விளையாடியது மிகப்பெரிய பெருமை, நன்றி இந்தியா. ஜெய் ஹிந்த்" என தெரிவித்துள்ளார்.
Category: விளையாட்டு, புதிது
Tags: