Wednesday 8th of May 2024 06:19:45 PM GMT

LANGUAGE - TAMIL
.
பேரறிவாளன் பரோல் மனு நிராகரிப்பு: உயர் நீதிமன்றத்தில் கை விரித்தது தமிழ்நாடு அரசு!

பேரறிவாளன் பரோல் மனு நிராகரிப்பு: உயர் நீதிமன்றத்தில் கை விரித்தது தமிழ்நாடு அரசு!


பேரறிவாளனுக்கு பரோல் வழங்குமாறு கோரப்பட்ட மனுவை நிராகரித்துவிட்டதாக தமிழ்நாடு அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ள நிலையில், பேரறிவாளனுக்கு 90 நாட்கள் பரோல் கேட்டு அற்புதம்மாள் தொடர்ந்த வழக்கில், செப்டம்பர் 8ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், ஆயுள் கைதியாக இருக்கும் பேரறிவாளன், கடந்த 28 ஆண்டுகளாக சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.

அவருக்கு 90 நாள் பரோல் கேட்டு அவரது தாயார் அற்புதம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, பேரறிவாளனுக்கு 90 நாட்கள் பரோல் கேட்டு அற்புதம்மாள் அனுப்பிய மனு நிராகரிக்கப்பட்டு, தமிழ்நாடு அரசுக்கு அனுப்பப்பட்டுவிட்டதாக தமிழ்நாடு சிறைத்துறை விளக்கம் அளித்தது.

இந்நிலையில் இவ்வழக்கு இன்று (செப்-04) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசு தனது நிலைப்பாட்டை தெரிவித்தது. பேரறிவாளனின் பரோல் மனு நிராகரிக்கப்பட்டுவிட்டதாக தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, அற்புதம்மாள் தொடர்ந்த வழக்கில், செப்டம்பர் 8ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.


Category: செய்திகள், புதிது
Tags: இந்தியா, தமிழ்நாடு, சென்னை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE