கனடா ரொரண்டோ பகுதியில் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தாயையும் தந்தையையும் அவர்களின் 28 வயது மகன் குத்திக் கொன்ற கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து கொலையாளியான மகன் ரயிலுடன் மோதி இறந்த நிலையில் கண்டறியப்பட்டார்.
ரொரண்டோ - கிங் ஜோர்ஜ் சாலையில் உள்ள ஒரு வீட்டில் சனிக்கிழமை இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக நேற்று ஞாயிற்றுக்கிழமை பொலிஸார் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் சம்பவ இடத்துக்கு வந்தபோது வீட்டின் முன் ஒரு நபர் பலத்த குத்துக் காயங்களுடன் சடலமாகக் காணப்பட்டார். வீட்டுக்குள் ஒரு பெண் காயங்களுடன் இறந்து கிடந்தார்.
கொல்லப்பட்ட இருவரும் கணவன், மனைவியான ஜோவா பார்சிலோஸ்(64), மற்றும் இவா பார்சிலோஸ் (59) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விசாரணைகளின்போது ஒரு நபர் யு.பி. எக்ஸ்பிரஸ் ரயிலில் மோதி இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தாக பொலிஸார் கூறினர். அவர் கொல்லப்பட்ட தம்பதியரின் மகன் திபெரியோ பார்சிலோஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தாய், தந்தையரை அவா்களின் மகன் டைபீரியோ தான் குத்திக் கொன்றுள்ளார் என நம்புவதாக பொலிஸார் தெரிவித்தனர். சேகரித்த தடயங்கள் இதனையே உறுதி செய்வதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இதேவேளை, கொலை நடைபெற்ற நேரத்தில் மகன் திபெரியோ தாய், தந்தையருடன் வீட்டில் வசிக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெளியில் இருந்து வந்தே அவா் இந்தக் குற்றங்களைப் புரிந்துள்ளார் என நம்பும் பொலிஸார், அவர் வசித்த இடம் தொடர்பான தகவல் தெரிவித்தவா்கள் அறிவிக்குமாறு கோரியுள்ளனர்.
மூன்று பேருடைய பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்கள் தெரிந்தவர்கள் 416-808-7400 என்ற தொலைபேசி இலக்கத்தில் அல்லது குற்றத் தடுப்பு பொலிஸாரைத் தொடர்புகொண்டு தகவல்களை வழங்குமாறு ரொரண்டோ பொலிஸார் கேட்டுள்ளனர்.