இந்தியாவின் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை 80 இலட்சத்தைக் கடந்துள்ளது.
கடந்த 24 மணி நேரங்களில் 49,881 புதிய தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் இந்தியாவில் இன்று வரை உறுதிப்படுத்தப்பட்ட தொற்று நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 80 இலட்சத்து 40 ஆயிரத்து 203 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது அமெரிக்காவைத் தொடர்ந்து அதிக தொற்று நோயாளர்களைக் கொண்ட நாடாக இந்தியா உள்ளது. அடுத்த வாரங்களில் தொற்று நோயாளர் எண்ணிக்கை அமெரிக்காவையும் விஞ்சலாம் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
நேற்று வியாழக்கிழமை இந்தியாவில் மேலும் 517 கொரோனா மரணங்கள் பதிவாயின. இவற்றுடன் நாட்டில் பதிவான மொத்த கொரோனா மரணங்கள் 120,527 ஆக உயர்ந்துள்ளன.
இதேவேளை, முன்னைய வாரங்களுடன் ஒப்பிடுகையில் இவ்வாரத்தில் இந்தியாவில் புதிய தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.