ஒன்ராறியோவில் நேற்று வியாழக்கிழமை 934 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. புதிய தொற்று நோயாளர்களும் கடந்த ஏழு நாட்கள் சராசரி தொற்று நோயாளர் தொகை 900 ஆக பதிவாகியுள்ளது.
மாகாணத்தில் நேற்று உறுதிப்படுத்தப்பட்ட புதிய தொற்று நோயாளர்களில் 420 பேர் ரொரண்டோவைச் சோ்ந்தவர்களாவர்.
பீல் பிராந்தியத்தில் - 169, யோர்க் பிராந்தியத்தில் - 95 மற்றும் ஒட்டாவாவில் - 58 பேரும் நேற்று உறுதிப்படுத்தப்பட்ட தொற்று நோயாளர்களில் அடங்கின்றனர்.
ஒன்ராறியோவில் மேலும் பல பகுதிகளிலும் இரட்டை இலக்க அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
இதன்படி ஹால்டன் பிராந்தியத்தில் -35, ஹாமில்டன்- 28, டர்ஹாம் பிராந்தியம்- 19, நயாகரா- 16, சிம்கோ முஸ்கோகா - 15, வாட்டர்லூ பிராந்தியம்- 13, கிழக்கு ஒன்ராறியோவில் 13 தொற்று நோயாளர்கள் நேற்று உறுதிப்படுத்தப்பட்டனர்.