Friday 26th of April 2024 11:26:41 PM GMT

LANGUAGE - TAMIL
-
கனடாவுக்குள் நுழைந்த சுமார் 53 இலட்சம்  பேருக்கு தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு!

கனடாவுக்குள் நுழைந்த சுமார் 53 இலட்சம் பேருக்கு தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு!


கனடிய எல்லைகள் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டதில் இருந்து இதுவரை கனடாவுக்குள் நுழைந்த அத்தியாவசிய தொழிலாளர்கள் சுமார் 53 இலட்சம் பேருக்கு தனிமைப்படுத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கனடா எல்லை சேவைகள் அமைப்பின் புள்ளிவிவரங்களின்படி 2020 மார்ச் 31 முதல் நவம்பர் 12 வரை மொத்தம் 65 இலட்சத்து 44 ஆயிரத்து 803 போ் நாட்டிற்குள் நுழைந்தனர். அவர்களில் 81 சதவீதமான அத்தியாவசியப் பணியாளர்களுக்கு தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கனடாவுக்குள் நுழைந்தவர்களில் 50 வீதம் அல்லது 32 இலட்சம் பேர் எல்லை மூடலில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ள வாகன சாரதிகளாவர்.

இதேவேளை, ஒரு வாகன சாரதி ஒவ்வொரு நாளும் எல்லைக்குள் நுழைந்து வெளியேறலாம். ஆனால் அவர் ஒவ்வொரு முறையும் உள்நுழையும்போதும் கனடவுக்கு நுழையும் நபரது எண்ணிக்கையில் கணக்கிடப்படுவார்.

அத்துடன், எல்லை மூடப்பட்ட பின்னர் ஜூலை இறுதி வரை கனடாவுக்குள் நுழைவோர் தொடர்பான முறையான கணக்கெடுப்பு தொடங்கவில்லை என்பதால் 81 வீதம் தனிமைப்படுத்தல் விலக்கு அளிக்கப்பட்ட வர்கள் தொடர்பாக புள்ளிவிவரங்கள் துல்லியமானவை அல்ல என கனடிய எல்லைச் சேவைகள் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Category: உலகம், புதிது
Tags: கனடா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE