Friday 26th of April 2024 07:39:48 AM GMT

LANGUAGE - TAMIL
-
மறைந்த பாடகா் எஸ்.பி.பிக்கு  பத்மவிபூஷன் விருது அறிவிப்பு!

மறைந்த பாடகா் எஸ்.பி.பிக்கு பத்மவிபூஷன் விருது அறிவிப்பு!


மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துக்கு குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று இந்திய உயர் விருதுகளில் ஒன்றான பத்மவிபூஷன் விருது இந்திய மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுவது போல இந்த ஆண்டும் குடியரசு தினத்தை முன்னிட்டு கல்வி, சமூக சேவை, பொது நிர்வாகம், அறிவியல், இலக்கியம், கலை விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த 119 பேருக்கு 2021 ஆம் ஆண்டுக்கான பத்ம விபூஷன் விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதன்படி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல திரை உலகில் 16 இந்திய மொழிகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி மறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியத்துக்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த வருடம் செப்டம்பர் 25-ஆம் திகதி உயிரிழந்தார்.

உயிரிருடன் இருந்தபோது ஆறு முறை தேசிய விருதும், பல்வேறு மாநில விருதுகளும், பத்மஸ்ரீ பத்மபூஷன் ஆகிய விருதுகளையும் பெற்ற பாலசுப்ரமணியத்தை மற்றொரு கௌரவிப்பாக பத்ம விபூஷன் விருதை இந்திய அரசு அறிவித்துள்ளது.


Category: உலகம், புதிது
Tags: இந்தியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE