Friday 26th of April 2024 10:07:48 AM GMT

LANGUAGE - TAMIL
.
அஷ்வின் அபார சதம்: 2வது இனிங்சிலும் தடுமாறும் இங்கிலாந்து!

அஷ்வின் அபார சதம்: 2வது இனிங்சிலும் தடுமாறும் இங்கிலாந்து!


சுற்றுலா இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் 2வது இனிங்சில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஷ்வினின் அபார சதத்தின் மூலம் இந்திய அணி வலுவான ஓட்ட இலக்கை நிர்ணயித்துள்ளது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் 2ஆவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளான இன்று 2வது இனிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய இந்திய அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 286 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் அபாரமாக துடுப்பெடுத்தாடி 148 பந்துகளை எதிர்கொண்டு 106 ஓட்டங்களையும், விராட் கோலி 62 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்று ஆட்டமிழந்தனர்.

இங்கிலாந்து அணி முதலாவது இனிங்சில் 134 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்திருந்த நிலையில் 481 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் தனது 2ஆவது இனிங்சை ஆரம்பித்தது.

முதலாவது இனிங்சைப் போன்றே இந்திய பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாது தடுமாறிவருகிறது.

இன்றைய 3ஆவது நாள் ஆட்ட நேர முடிவில் 19 ஓவர்களில் மூன்று விக்கெட்டுக்களை இழந்து 53 ஓட்டங்களைப் பெற்று தடுமாறிவருகிறது.

தோல்வியை தவிர்க்க இன்னும் 429 ஓட்டங்களைப் பெறவேண்டிய நிலையில் நாளைய 4ஆம் நாள் ஆட்டத்தை இங்கிலாந்து அணி தொடர உள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: விளையாட்டு, புதிது
Tags: இங்கிலாந்து, இந்தியா, தமிழ்நாடு, சென்னை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE