Friday 26th of April 2024 07:29:34 PM GMT

LANGUAGE - TAMIL
-
யாழ்.போதனா வைத்தியசாலையில் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 04 ஆக அதிகரித்தது!

யாழ்.போதனா வைத்தியசாலையில் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 04 ஆக அதிகரித்தது!


யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் தாதியர்கள் இருவர் உட்பட்ட மூவருக்கு இன்று கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இன்று யாழ்.போதனா வைத்தியாசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இன்று தொற்றுக்குள்ளானவர்கள் தாதியர்கள் இருவர், அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர் என்று தெரியவந்துள்ளது.

நேற்றைய நாள் விசேட வைத்திய நிபுணர் ஒருவருக்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இதனால் யாழ்.போதனா வைத்தியசாலையில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 04 ஆக அதிகரித்துள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE