தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குடலிறக்க நோய் பாதிப்பு காரணமாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த சிகிச்சைக்காக சென்னை, அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் எடப்பாடி பழனிச்சாமி மூன்று நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு உட்பட இந்தியாவில் கொரோனாத் தொற்று மிக வேகமாக அதிகரித்து வரம் நிலையில், திடீரென முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொரோனா குறித்த தகவல்கள் பரவியிருந்தது.
இந்நிலையில், முதலமைச்சருக்கு கொரோனா தொற்று இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.