சா்வதேச ரீதியான பிரச்சினைகளில் ஒரு சில நாடுகள் மட்டும் முடிவெடிக்க முடியாது. ஒரு சில நாடுகள் விதிக்கும் சட்டங்கள் அனைவருக்கும் பொருந்தாது என சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
சா்வதேச பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் உலக நாடுகளை அவா் கேட்டுக் கொண்டார்.
ஹைனானில் நடந்த பாவோ கருத்தரங்கில் இணையம் வழி கலந்து கொண்டு நேற்று உரையாற்றும்போது ஜி ஜின்பிங் இவ்வாறு தெரிவித்தாா்.
இந்த மாநாட்டில் இலங்கை ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச, தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன், இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோ, பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா உள்ளிட்ட பல ஆசிய நாடுகளின் தலைவர்களும் இணைய வழியில் பங்கேற்றனர்.
அத்துடன், 2,000க்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் , சா்வதேச அமைப்புகளின் தலைவர்களும் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டில் பேசிய சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், ஒரு தலைப்பட்சமான முடிவுகள், மேலாதிக்க செயற்பாடுகளில் ஈடுபட ஒரு சில நாடுகளுக்கு இடம் அளிக்கக்கூடாது. அத்துடன் கொள்கை ரீதியில் வேறுபாடு காண்பதால் ஒரு நாடு மீது மற்றொரு நாடு காட்டும் மோதல் போக்கை உலக நாடுகள் நிராகரிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
உலக நாடுகள் ஒன்றுக்கொன்று சமத்துவம், நம்பிக்கை, மதிப்புடன் உறவுகளை வலுப்படுத்த வேண்டும்.
இன்னொரு நாட்டின் உள்விவகாரங்களில் தலையிட்டு, அவர்களுக்குக் கருத்துச்சொல்வது போன்ற ஆணவப் போக்குகளை சில நாடுகள் கைவிட வேண்டும். அனைத்துலக நாடுகள் விரும்புவது நீதியை மட்டுமே. மேலாதிக்கத்தை அல்ல என ஜி ஜின்பிங் குறிப்பிட்டார்.
தொழில்நுட்பம், வர்த்தகம், ஹொங்கொங், தாய்வான் போன்ற விடயங்களில் அமெரிக்காவின் தலையீடு குறித்தே அவா் இவ்வாறு மறைமுகமாகக் கருத்து வெளியிட்டுள்ளதாகக் கருதப்படுகிறது. இதேவேளை, பருவநிலை மாற்றத்தைத் தடுக்க உலக நாடுகள் ஒன்றிணைந்து அதிகமான ஈடுபாட்டுடன் செயற்பட வேண்டும் என இந்த மாநாட்டில் சீன ஜனாதிபதி வலியுறுத்தினார்.