Friday 26th of April 2024 01:15:48 PM GMT

LANGUAGE - TAMIL
-
அசாமில் இன்று காலை நிலநடுக்கம்; ரிக்டரில் 6.4 ஆக பதிவானது!

அசாமில் இன்று காலை நிலநடுக்கம்; ரிக்டரில் 6.4 ஆக பதிவானது!


இந்தியா - அசாம் மாநிலத்தில் இன்று காலை 7.51 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம் வடகிழக்கு மாநிலங்களிலும், வடக்கு வங்காளத்திலும் உணரப்பட்டது.

நிலநடுக்கத்தின் மையப்புள்ளியானது அசாம் மாநிலத்தின் தேஜ்பூரிலிருந்து 43 கி.மீ தொலைவில் இருந்ததாகக் கணிக்கப்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் 17 கி.மீ தொலைவில் நிலநடுக்கம் உருவானதாகவும் தேசிய நிலநடுக்க மையம் கண்டறிந்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தில் இதுவரை யாரும் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகவில்லை. எனினும் பல கட்டடங்கள் பலத்த சேதம் அடைந்துள்ளன. சில இடங்களில் நிலத்தில் பாரிய பிளவு ஏற்பட்டுள்ளது.


Category: உலகம், புதிது
Tags: இந்தியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE