இலங்கையில் இருந்து ஆயுத மேந்திய கும்பல் ஒன்று தமிழ்நாட்டுக்குள் ஊடுருவ முயல்வதாக இந்திய மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளதை அடுத்து மாநில பொலிஸார் உசார்ப்படுத்தப்பட்டுள்ளனர்.
நேற்று சனிக்கிழமை மால இந்திய உளவுத்துறை தமிழகத்தை எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமேஸ்வரம், சென்னை ஆகிய முக்கிய நகர்களில் பொலிஸார் முழு விழிப்பு நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஆயுதங்களுடன் கூடியவர்களை ஏற்றிக்கொண்டு ஒரு படகு ராமேஸ்வரம் நோக்கிச் சென்றதாக உளவுத்துறை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இருந்தாலும் அந்தப் படகில் இருந்தவர்கள் யார் ? அவர்கள் எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் ?என்பதும் துல்லியமாகத் தெரியவில்லை என்று அந்தத் தகவல் வட்டாரங்களை மேற்கோள்காட்டி இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனிடையே, உளவுத்துறை தகவலை அடுத்து கேரளா கடற்கரை முழுவதும் விழிப்புநிலையில் வைக்கப்பட்டுள்ளதாக கேரள மாநில பொலிஸாரும் உசார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.