ஜேர்மன் ஆட்சித்துறைத் தலைவர் ஏங்கெலா மெர்கல் இருவேறு தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டதாக ஜோ்மனிய அரசாங்கத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.
கடந்த ஏப்ரல் மாதத்தில் முதலாவதாக ஆஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியை போட்டுக்கொண்ட ஏங்கெலா மெர்கல், சில நாட்களுக்கு முன்னர் இரண்டாவதாக மொடர்னா தடுப்பூசியை போட்டுக்கொண்டதாக அவா் கூறினார்.
வெவ்வேறு தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்வதில் சிக்கல்கள் இல்லை என நிபுணர்கள் கூறினாலும் அதை இதுவரை யாரும் உறுதிப்படுத்தவில்லை. இந்நிலையிலேயே மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் இருவேறு தடுப்பூசிகளை ஏங்கெலா மெர்கல் போட்டுக்கொண்டார்.
ஒரு நபருக்கு இருவேறு தடுப்பூசிகளைப் போடுவது குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. பிரிட்டனில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், இருவேறு தடுப்பூசி போட்டுக்கொண்டவருக்கு லேசானது முதல் மிதமானது வரையிலான பக்கவிளைவுகள் ஏற்படலாம் எனக் கண்டறியப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.