தெற்கு லண்டன் ரயில் நிலையம் அருகே நுழைவு வளைவுகளில் நேற்று இடம்பெற்ற பெரும் தீ விபத்தில் சிக்கி 6 பேர் காயமடைந்தனர். அத்துடன், 3 வணிக வளாகங்கள், 6 கார்கள் என்பன முற்றிலும் எரிந்து நாசமாயின.
லண்டனின் தென்கிழக்கு பகுதியான நியுவிங்டன் என்ற இடத்தில் அமைந்துள்ள எலிபண்ட் அன்ட் காசல் ரயில் நிலையம் அருகே ஏற்பட்ட பயங்கர தீ விபத்தை அடுத்து அந்தப் பகுதி பெரும் புகை மண்டலமாகக் காணப்பட்டது.
சம்பவ இடத்திற்கு 15 தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்த 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு படையினர் நீண்ட நேரம் கடுமையாகப் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இந்தத் தீவிபத்துக்கான காரணம் குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை. இது குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.
Category: உலகம், புதிது
Tags: இங்கிலாந்து