மேற்கு ஐரோப்பிய நாடுகளான ஜேர்மனி மற்றும் பெல்ஜியத்தில் பெய்த வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட அனர்த்தங்களால் பலியானோர் எண்ணிக்கை 190-ஐக் கடந்தது.
ஜேர்மனியின் ரைன்லாண்ட்-பலடினேட் மாகாணத்தில் வெள்ளத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட ஆா்வீலா் பகுதியில் மட்டும் இதுவரை 110-க்கும் மேற்பட்டவா்கள் பலியாகியுள்ளனா். அத்துடன், ஜேர்மனியில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 1,300 பேர் வரை காணாமல் போயுள்ளனர்.
வெள்ள நீா் வடிந்து, மீட்புப் பணிகள் துரிதமடைந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
வெள்ளத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்ட ரைன்லாண்ட்-பலடினேட் உள்ளிட்ட பகுதிகளை ஜோ்மன் ஆட்சித் தலைவர் ஏங்கலா மெர்கல் நேற்று நேரில் சென்று பார்வையிட்டார்.
"இது ஒரு பேரழிவு. இயற்கையின் இந்தக் கோரத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை " என்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் சேதங்களை மதிப்பிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் மேர்க்கெல் கூறினார்.
பேரழிவிற்குள்ளான பகுதிகளை சீரமைக்க மத்திய அரசும் பிராந்தியங்களும் ஒன்றிணைந்து செயற்படும் என்று அவர் உறுதியளித்தார்.
இதேவேளை, பாதிக்கப்பட்ட பகுதிகளை மீண்டும் புனரமைக்க 300 மில்லியன் யுரோக்கள் உடனடியாக ஒதுக்கப்படும். இதற்கான அமைச்சரவைப் பத்திரம் விரைவில் தாக்கல் செய்யப்படும் என ஜேர்மனி நிதியமைச்சர் ஓலாஃப் ஷோல்ஸ் தெரிவித்தார்.
பெல்ஜியத்தின் சில பகுதிகளும் கடந்த வாரம் தொடா்ந்து பெய்த கனமழை மற்றும் அதன் விளைவால் ஏற்பட்ட வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பெல்ஜியத்தில் 27 போ் உயிரிழந்தனா்.
அத்துடன், மழை மற்றும் வெள்ளப்பெருக்கால் நெதர்லாந்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நெதர்லாந்து தெற்கு மாகாணமான லிம்பர்க்கில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் பல வீடுகள் சேதமடைந்துள்ளன.