ரொரன்டோ - நோர்த் யோர்க் பகுதியில் நேற்று சனிக்கிழமை பட்டப்பகலில் வணிக வளாகம் ஒன்றின் வாகன தரிப்பிடத்தில் வைத்து 20 வயது இளைஞன் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
வெஸ்டன் சாலை மற்றும் நெடுஞ்சாலை 401 பகுதியில் பிற்பகல் 3:30 மணியளவில் இந்தக் கொலை இடம்பெற்றதாக ரொரன்டோ பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தவேளை வாகனம் ஒன்றுக்குள் துப்பாக்கியால் சுடப்பட்ட இளைஞன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார். காப்பாற்றும் முயற்சிகள் இடம்பெற்றபோதும் அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக பொலிஸார் கூறினர்.
இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்புக் கமரா காட்சிகள் ஆராயப்படும். நேரடிச் சாட்சிகளின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவா்கள் தெரிவித்தனர்.