தென்கிழக்கு ஆசியா மீது சீனா ஆதிக்கம் செலுத்தாது என சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
ஆசியான் என்று அழைக்கப்படும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கத்துக்கும், சீனாவுக்கும் இடையிலான 30 ஆண்டுகால உறவை குறிக்கும் வகையில் காணொலி காட்சி வாயிலாக நேற்று நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்று பேசும்போதே ஜின்பிங் இவ்வாறு தெரிவித்தார்.
தென்கிழக்கு ஆசியாவில் சீனா தனது அதிகாரத்தை விரிவுபடுத்த முயற்சித்து வருவதாக இப்பிராந்தியத்தில் சில நாடுகள் தொடர்ந்து கவலை தெரிவித்து வருகின்றன. குறிப்பாக தென்சீன கடல் விவகாரத்தில் சீனவுக்கும், பிராந்தியத்தின் சில நாடுகளுக்கும் இடையில் பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது.
இந்நிலையில் தென்கிழக்கு ஆசியா மீது சீனா ஆதிக்கம் செலுத்தாது என சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் உறுதிபட தெரிவித்தார்.
ஏனைய நாடுகள் மீது மேலாதிக்கம் செலுத்துவது மற்றும் அதிகார அரசியலை திணப்பது போன்ற செயற்பாடுகளை சீனா உறுதியுடன் எதிர்க்கிறது. அண்டை நாடுகளுடன் நட்புறவைப் பேண விரும்புகிறது. அத்துடன், பிராந்தியத்தில் நிலையான அமைதியை உறுதி செய்வதில் அண்டை நாடுகளுடன் கூட்டிணைந்து செயற்படவே நாங்கள் விரும்புகிறோம்.
தென்கிழக்கு ஆசியாவில் ஆதிக்கம் செலுத்த சீனா ஒருபோதும் முயற்சி செய்யாது. சிறிய நாடுகளை கொடுமைப்படுத்தும் வகையான செயற்பாடுகளில் நாங்கள் நாங்கள் ஒருபோதும் ஈடுபட மாட்டோம் எனவும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் குறிப்பிட்டார்.