Wednesday 8th of May 2024 10:55:20 AM GMT

LANGUAGE - TAMIL
.
3வது ரி-20 யிலும் வெற்றி; பங்களாதேஷை வெள்ளையடிப்பு செய்தது பாகிஸ்தான்!

3வது ரி-20 யிலும் வெற்றி; பங்களாதேஷை வெள்ளையடிப்பு செய்தது பாகிஸ்தான்!


டாக்காவில் நடைபெற்ற 3வது ரி-20 கிரிக்கெட் போட்டியிலும் வெற்றி பெற்றுள்ள பாகிஸ்தான் அணி தொடரை முழுமையாக கைப்பற்றியுள்ளது.

பங்களாதேசுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் சென்றுள்ள பாகிஸ்தான் அணி பங்களாதேஷ் அணியுடன் 3 போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில் விளையாடியது.

முன்னதாக நடைபெற்ற இரு போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியிருந்த நிலையில் டாக்காவில் நேற்று நடைபெற்ற 3வதும் இறுதியுமான ரி-20 போட்டியிலும் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில துடுப்பெடுத்தாடியது.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட் இழப்பிற்கு 124 ஓட்டங்களை பெற்றிருந்தது பங்களாதேஷ் அணி.

அதிகபட்சமாக மொஹமட் நைய்ம் 47 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்திருந்தார்.

பந்துவீச்சில் மொஹமட் வசீம், உஸ்மான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தனர்.

125 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற நிலையில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி போட்டியின் கடைசி பந்துவரை போராடி வெற்றி பெற்றது.

கைதர் அலி -45, மொஹமட் ரிஸ்வான் -40 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றிருந்தனர்.

20ஓவரில் 5 விக்கெட்களை இழந்து 127 ஓட்டங்களை பெற்று 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பந்து வீச்சில் மஹமதுல்லா 3 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 3:0 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி கைப்பற்றியது.

போட்டியின் ஆட்ட நாயகன், தொடர் நாயகனாக பாகிஸ்தான் அணியின் கைதர் அலியும், மொஹமட் ரிஸ்வானும் தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Category: விளையாட்டு, புதிது
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE