இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளரான ஹர்பஜன் சிங் அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி சார்பில் சிறந்த சுழற்பந்துவீச்சு பங்களிப்பினை வழங்கியிருந்த ஹர்பஜன் சிங் கடந்த 2016 ஆம் ஆண்டில் இருந்து தேசிய அணிக்கு தேர்வு செய்யப்படாது இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் தொடர்ந்து ஐ.பி.எல். தொடரில் விளையாடிவந்த ஹர்பஜன் தனது ஓய்வை அறிவித்துள்ளமை அவரது ரசிகர்களை ஏமாற்றத்திற்குள்ளாக்கியுள்ளது.
41 வயதாகும் ஹர்பஜன் சிங் 1998-ம் அண்டு மார்ச் 25-ந்தேதி டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆனார். கடைசியாக 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12 முதல் 15-ந்தேதி வரை நடைபெற்ற இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடினார்.
1998-ம் ஆண்டு ஒருநாள் போட்டியில் அறிமுகமாகி 2015-ம் ஆண்டு வரை விளையாடினர். 2006 முதல் 2016 வரை டி20 கிரிக்கெட்டில் விளையாடியுள்ளார்.
ஹர்பஜன் சிங் 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 417 விக்கெட்டும், 236 ஒருநாள் போட்டியில் விளையாடி 269 விக்கெட்டும், 28 டி20 போட்டியில் விளையாடி 25 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: விளையாட்டு, புதிது
Tags: இந்தியா