Sunday 5th of May 2024 11:54:00 PM GMT

LANGUAGE - TAMIL
.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நூரி ரொக்கெட்டை இரண்டாவது தடவையாக இன்று ஏவுகிறது தென் கொரியா

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நூரி ரொக்கெட்டை இரண்டாவது தடவையாக இன்று ஏவுகிறது தென் கொரியா


முதன்முறையாக முழுமையான உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நூரி என்ற ரொக்கெட்டை (Nuri space rocket) இன்று இரண்டாவது தடவையாக விண்ணில் ஏவி தென் கொரியா சோதனை நடத்தவுள்ளது.

முதல் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டு நடத்தப்பட்டு எட்டு மாதங்களுக்குப் பின்னர் இரண்டாவது சோதனை இன்று இடம்பெறுகிறது.

இரண்டாவது சோதனை ஏவுதலுக்காக தென் கொரியாவின் தெற்கு கடற்கரையில் உள்ள நரோ விண்வெளி மைய ஏவுதளத்தில் நேற்று திங்கட்கிழமை ரொக்கெட் நிலைநிறுத்தப்பட்டது.

இந்தச் சோதனையை கடந்த வாரம் நடத்த தென்கொரியா திட்டமிட்டது. எனினும் இறுதி நேரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த முயற்சி இடைநிறுத்தப்பட்டது.

கொரியா விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் விஞ்ஞானிகளும், பொறியியலாளர்களும் இணைந்து 1.6 பில்லியன் டொலர் மதிப்பில் இந்த ரொக்கட்டை உருவாக்கியுள்ளனர். இந்த ரொக்கெட் 47 மீட்டர் (154 அடி) நீளம் கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Category: உலகம், புதிது
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE