தென்னிந்திய பிரபல நகைச்சுவை நடிகரும் நாடக ஆசிரியருமான கிரேசி மோகன் மாரடைப்பு காரணமாக இன்று காலமானார்.
இன்று காலை பதினொரு மணியளவில் மாரடைப்பு காரணமாக வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டதாகவும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாகவும் தென்னிந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதலில் பொறியாளராக வாழ்க்கையை துவங்கினார், கிரேசி மோகன். 1979-ல் கிரேசி கிரியேஷன்ஸ் என்ற நாடக குழுவை தொடங்கி பல காமெடி நாடகங்களை அரங்கேற்றினார்.
பின்னர் தென்னிந்தியத் திரைப்படங்களுக்கும் வசனம் எழுதிப் பெயர் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.