இல்லை... நடிகர் நானாபடேகர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா கொடுத்த புகாரில் ஆதாரம் இல்லை. எனவே இந்த வழக்கை தொடர்ந்து நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்று போலீசார் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.
சினிமாத்துறை, கலைத்துறை உட்பட பலவற்றிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் நடந்து வருவதை "மீடூ" இயக்கம் பகிரங்கப்படுத்தியது. முக்கியமாக நடிகைகளுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை குறித்து இதில் அதிகம் வெளியானது. முக்கியமாக தமிழ் சினிமாவில் வைரமுத்து மீது பாடகி சின்மயி கொடுத்த பாலியல் தொல்லை விஷயம் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதே போல் பாலிTட்டில் பிரபல இந்தி நடிகர் நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா பாலியல் புகார் அளித்தார்.
இதையடுத்து விசாரணை நடத்தப்பட்டது. இந்த புகார் பாலிவுட்டில் பெரும் பரபரப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்தியது. இந்த புகார் மீது விசாரணை நடத்தி அந்தேரியில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றில் போலீசார் அறிக்கையை தாக்கல் செய்தனர்.
அதில் நானா படேகருக்கு எதிரான பாலியல் புகாருக்கு ஆதாரம் இல்லை. அவர் மீது வழக்கை தொடர்ந்து நடந்த வேண்டிய அவசியம் இல்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர். போலீசாரின் இந்த அறிக்கையை நானா படேகரின் வக்கீல் வரவேற்று உள்ளார். இருப்பினும் இது போலீசாரின் அலட்சியத்தை காட்டுகிறது. இதை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றில் ரிட் மனு தாக்கல் செய்வோம் என்று தனுஸ்ரீ தத்தாவின் வக்கீல் நிதின் சாத்புதே தெரிவித்துள்ளார்.
பெரும் சர்ச்சையை கிளப்பிய இந்த பாலியல் புகாரில் போலீசார் அறிக்கை பற்றி அறிந்து நானாபடேகரின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.