பதினேழு வருடங்களாக தென்னிந்திய திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்து வரும் திரிஷாவுக்கு இப்போது சுக்ரதிசை போல் உள்ளது. இவர் தற்போது 3 மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இப்படி வேறு எந்த ஹீரோயின்களுக்கும் கிடைக்காத வாய்ப்பாக இது உள்ளது.
தமிழ், தெலுங்கில் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார் திரிஷா. இவரது ஆசையே ரஜினியுடன் ஜோடியாக நடிக்க வேண்டும் என்பதுதான். அதுவும் பேட்ட படத்தின் வாயிலாக நிறைவேறி விட்டது. பல ஹிட் படங்கள், தோல்வி படங்களை கொடுத்தாலும் இன்றும் நிலைத்து ஹீரோயினாக மட்டுமே நடித்து வருகிறார்.
கடந்த வருடம் வெளிவந்த ‘96’ படத்தால் மீண்டும் அடுத்த ரவுண்டிற்கு தயாராகிவிட்டார் திரிஷா. முன்னணிக்கு வந்துள்ள இவர் அவர் தமிழில் நாயகியாக நடித்துள்ள நான்கு படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதை தவிர தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் படத்திலும், மலையாளத்தில் மோகன்லால் படத்திலும் திரிஷா ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளராம். மேலும் மணிரத்னம் இயக்கத்தில் உருவாக உள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்திலும் திரிஷா நடிக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஒரே சமயத்தில் மூன்று மொழிகளில் பெரிய படங்களில் நடிக்கும் வாய்ப்பு திரிஷாவுக்குக் கிடைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்தனை ஆண்டுகளாக திரையுலகில் நிலைத்து நிற்பதும் பெரிய சாதனைதானே என்கின்றனர் திரிஷாவின் ஆதரவாளர்கள்.