மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீசாகி இன்று வசூலில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது நடிகர் விஜய் நடித்துள்ள பிகில் படம்.
விஜய், அட்லீ கூட்டணி இணைந்த மூன்றாவது படம்தான் பிகில். 180 கோடி ரூபாய் பொருட்செலவில் இந்தப் படத்தை பிரம்மாண்டமாக ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்தது.
உலகம் முழுவதும் 4 ஆயிரம் தியேட்டர்களில் இந்த படம் ரிலீஸ் ஆனதாக தகவல்கள் வெளியானது. கோலிவுட்டில் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது போல், ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் ரசிகர்கள் இந்த படத்தை ஆர்வத்துடன் எதிர்பார்த்து இருந்தனர்.
கடந்த தீபாவளி ரிலீசாக இந்த படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை இந்த படம் பெற்றாலும் ரசிகர்களை வெகுவாக திருப்திபடுத்தியிருந்தது. இதனால் படத்தின் வசூல் கொஞ்சம் கூட குறையவே இல்லை. வெளிநாடுகளிலும் வசூலில் சாதனைப்படைத்தது.
மெர்சல் மற்றும் சர்க்காருக்குப் பிறகு விஜய்யின் ரூ.200 கோடியை எட்டிய மூன்றாவது படம் பிகில் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படம் அவரது சினிமா வாழ்க்கையின் மிகப்பெரிய வெற்றிகளில் ஒன்றாக மாறி உள்ளது.
தற்போது பிகில் திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.250 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது என்று கூறப்படுகிறது. இதன் மூலம் நடப்பாண்டில் அதிக வசூல் செய்த தமிழ்ப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் செம உற்சாகத்தில் உள்ளனர்.