வரும் 21ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று 6 தமிழ்ப் படங்கள் திரைக்கு வரவிருக்கின்றன. அருண் விஜய், சந்தானம், பாரதிராஜா ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படங்கள் உள்ளிட்ட 6 தமிழ்ப் படங்கள் இந்த வாரம் திரைக்கு வரவிருப்பது திரை ரசிகர்களுக்கு கொண்டாட்டமாகும்.
கார்த்திக் நரேன் இயக்கத்தில், அருண் விஜய், பிரியா பவானி சங்கர் மற்றும் பிரசன்னா ஆகியோர் நடிக்கும் ‘மாஃபியா’ திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. குற்றப்பின்னணியில் அமைந்த திரில்லர் கதையாக உருவாக்கப்பட்டிருக்கும் ‘மாஃபியா’ திரைப்படத்தின் குறும் முன்னோட்டத்தை பிரத்தியேகமாக ரஜினிக்கு திரையிட்டு காட்டப்பட்டுள்ளது. அதனை பார்த்த ரஜினி ‘பிரிலியண்ட ஒர்க் கண்ணா, செமையா இருக்கு’ என இயக்குனரையும் படக்குழுவினரையும் பாராட்டியிருந்தமை அப்படம் குறித்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மற்றும் சந்தானம் நடிக்கும் ‘சர்வர் சுந்தரம்; ஆகிய இரண்டு படங்களும் முதல் மூன்று நாட்களில் நல்ல வசூலை குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதைவிட இயக்குனர் இமயம் பாரதிராஜா நடித்து இயக்கியுள்ள ‘மீண்டும் ஒரு முதல்மரியாதை’ திரைப்படமும், சிறந்த தமிழ்த் திரைப்படமாக தேசிய விருதுபெற்ற ‘பாரம்’ திரைப்படம், ‘காட்ஃபாதர்’ மற்றும் ‘குட்டி தேவதை’ ஆகிய ஆறு படங்களும் இந்த வாரம் வெளியாக உள்ளது.