66 ஆவது தேசிய திரைப்பட விருதுக்கான பட்டியில் சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வாகியிருந்த ‘பாரம்’ படத்தின் சுவரொட்டியை ஒட்டுவேன் என அண்மையில் இயக்குநர் மிஷ்கின் சொன்னதுபடியே சென்னை நகரத்து வீதிகளில் ஒட்டியுள்ளார்.
பிரியா கிருஸ்ணசாமி தயாரித்து இயக்கும் ‘பாரம்’ திரைப்படத்தின் சுவரொட்டிகளை வீதிகளில் ஒட்டி விளம்பரம் செய்வேன் என்று இயக்குநர் மிஷ்கின் கூறியிருந்தமைக்கேற்ப கடந்த வெள்ளிக்கிழமை அப்படம் வெளியாகியிருந்த போது அதன் விளம்பர சுவரொட்டிகளை சென்னை நகர வீதிகளில் ஒட்டிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.