நாடக காதலை மையமாக வைத்து தயாராகி கடந்த வாரம் வெளியாகியிருந்த திரௌபதி திரைப்படம் 2 வாரத்தில் 10 கோடி இந்திய ரூபா வசூல் செய்திருப்பதாக தனது ருவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் படத்தின் இயக்குநர் மோகன்.ஜி.
தமிழ்நாட்டில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி தடைகோரி வழக்குகள் வரை சென்று வெளியாகியிருந்த திரௌபதி திரைப்பட வெற்றி குறித்து மோகன்.ஜி அதில் குறிப்பிட்டிருப்பதாவது,
300 திரையரங்குகளில் 2வது வாரமாக தொடர்கிறது. இதுவரை ரூ. 10 கோடிக்கு மேல் மொத்தமாக வசூல் சாதனை புரிந்துள்ளது.
சிறு குழு கொண்ட தமிழின் கூட்டு முயற்சித் திரைப்படத்தை இவ்வளவு பெரிய வெற்றி பெறவைத்த மக்களுக்கு நன்றி. தொடர்ந்து ஆதரவு கொடுங்கள் என்று மேலும் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.