Friday 26th of April 2024 08:03:35 PM GMT

LANGUAGE - TAMIL
இந்தியாவில் சிக்கியுள்ள ஐநூறுக்கும் மேற்பட்ட இலங்கை மாணவர்கள்!

இந்தியாவில் சிக்கியுள்ள ஐநூறுக்கும் மேற்பட்ட இலங்கை மாணவர்கள்!


மேலதிக கல்விநடவடிக்கைக்காக இந்தியா சென்று தங்கி கல்விகற்றுவரும் இலங்கை பல்கலைக்கழகங்களின் பதினொன்றுக்கும் மேற்பட்ட விரிவுரையாளர்கள் உட்பட்ட ஐநூறுக்கும் அதிகமான மாணவர்கள் அடுத்த கட்டம் தொடர்பில் முடிவெடுக்கமுடியாத நிலையில் திண்டாடுவதாக தெரியவருகிறது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

பட்டப் படிப்புக்களுக்காக மட்டக்களப்பு வந்தாறுமூலை பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த விரிவுரையாளர் ஒருவரும் மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக விரிவுரையாளர்கள் பத்துப்பேரும் உள்ளடங்கலாக இலங்கையின் அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த மாணவர்கள் ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் கற்கை நெறியில் ஈடுபட்டிருப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

இதனிடையே இவர்களில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மட்டும் இலங்கையைச் சேர்ந்த மாணவர்கள் 23 பேர் கல்வி பயின்றுவருகின்றனர்.

அதேபோல பொறியியல், மருத்துவம் உட்பட்ட அனைத்துத் துறைகளிலும் பல நூற்றுக்கணக்கான மாணவர்கள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் கல்வி பயின்று வருகின்மையும் குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், பகுப்பு
Tags: இந்தியா, கிழக்கு மாகாணம், தமிழ்நாடு, சென்னை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE