Tuesday 7th of May 2024 10:16:16 PM GMT

LANGUAGE - TAMIL
கொரோனாவுக்கு முதல் இலங்கையா்  சுவிட்சா்லாந்தில் உயிரிழந்தார்!

கொரோனாவுக்கு முதல் இலங்கையா் சுவிட்சா்லாந்தில் உயிரிழந்தார்!


சுவிட்சா்லாந்தில் கொரோனா வைரஸூக்கு முதல் இலங்கைப் பிரஜை உயிரழந்துள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு இன்று உறுதி செய்துள்ளது.

59 வயதான இலங்கையா் ஒருவா் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி நேற்று மரணமடைந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பிரான்ஸில் யாழ்ப்பாணம் – கொக்குவில் பகுதியைச் சே்ந்த இளம் குடும்பஸ்தா் ஒருவா் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார்.

பிரான்ஸ் - கிறித்தை பகுதியில் வசித்து 34 வயதான குணரட்ணம் கீர்த்திகன் என்பவரே உயிரிழந்தவராவார்.

இவருக்கு திருமணமாகி 2 வயதில் ஒரு பெண்குழந்தை உள்ளது. இவருடைய மனைவி 5 மாதக் கர்ப்பிணி ஆவார்.

இவா் அண்மையில் சுவிஸ் நாட்டிற்கு சென்று திரும்பியுள்ளார். அதன்பின்னா் கொரோனா தொற்று அறிகுறிகள் தென்பட்ட நிலையில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். நோய் அதிகரித்த நிலையில் 8 நாட்கள் மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் வைக்கப்பட்டிருந்தார். எனினும் சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்துள்ளார்.

எனினும் இவரது மரணம் குறித்து இலங்கை வெளிவிவகார அமைச்சு இதுவரை உத்தியோகபூா்வாக உறுதிப்படுத்தவில்லை.


Category: உள்ளூர, பகுப்பு
Tags: பிரான்சு, இலங்கை, சுவிட்சர்லாந்து



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE