ஊரடங்கு உத்தரவு இன்று(27) செவ்வாய் கிழமை காலை ஆறு மணி முதல் மதியம் தளர்த்தப்பட்ட வேளை கிளிநொச்சியில் பொது மக்கள் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதில் தீவிரமாக ஈடுப்பட்டிருந்தனர்.
வங்கிகள் வியாபார நிலையங்கள் முன் அதிகளவான பொது மக்கள் வரிசையில் இடைவெளிவிட்டு காத்திருந்து தேவைகளை நிறைவேற்றிச் சென்றனர்.
பொதுச் சந்தைகளில் மக்கள் ஒன்று கூடுவதை தடுக்கும் நோக்கில் பொதுச் சந்தையில் கட்டடப் பகுதிக்குள் மரக்கறிகள் விற்பனை செய்யாமல் சந்தை வளாகத்தில் விற்பனை செய்யுப்பட்டுவருகின்றமை சிறப்பம்சமாகும்.
சதொச விற்பனை நிலையம், தனியார் விற்பனை நிலையம் என்பவற்றில் மக்கள் அதிகளவாக காணப்பட்டனர்.
இன்று பகல் மீண்டும் அமுலுக்கு வரும் ஊரடங்குச் சட்டம் எதிர் வரும் திங்கள் கிழமை காலை ஆறு மணிவரை நடைமுறையில் இருக்கும் என அரசு அறிவித்துள்ளது.
Category: உள்ளூர, பகுப்பு
Tags: இலங்கை, கிளிநொச்சி