Friday 26th of April 2024 07:26:03 AM GMT

LANGUAGE - TAMIL
பேனா பரப்பிய கொரோனா!

பேனா பரப்பிய கொரோனா!


நியூசிலாந்தில் பேனா மூலம் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது என நியூசிலாந்து பத்திரிகை ஒன்று தனது பத்தியில் தெரிவித்துள்ளது.

58 வயதான ஒருவர் நியூசிலாந்தின் தெற்கு வேக்ஃபீல் பகுதியில் வசிப்பவர். இவர் தனது நண்பரின் பேனாவை எடுத்து சுமார் 30 விநாடிகள் உயயோகித்துவிட்டு அந்தப் பேனாவை திருப்பி அவரிடமே கொடுத்துள்ளார்.

சில நாட்களுக்குப் பின்னர், நியூசிலாந்து சுகாதார அதிகாரிகள் அந்த நபருக்கு தொலைபேசி மூலம் அழைப்பை ஏற்படுத்தி கொரோனா வைரஸ் பாதிப்புக்குறித்தும், நோய் அறிகுறிகள் குறித்தும் வினவியுள்ளனர்.

அத்துடன் உடனடியாக வைத்தியசாலையை நாடி பரிசோதனை மேற்கொள்ளுமாறும் கோரியுள்ளனர்.

தடிமன் மற்றும் இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தபோதிலும், சுகாதாரத் துறையின் தொலைபேசி அழைப்பு கேலிக்குரியது என்று எண்ணி அவர் பரிசோதனைக்குச் செல்லவில்லை.

இருப்பினும் பேனாவுக்கு சொந்தக்காரருக்கு கொரோனா தாக்கம் உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து குறித்த நபரும் பரிசோதனை செய்தபோது தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதன் பின்னரே தான் அரசு வழங்கிய அறிவுரைகளைப் பின்பற்றியதாக அவர் தெரிவித்தார்.

என்று நியூசிலாந்து பத்திரிகை ஒன்று தனது பத்தியில் இந்த தகவலைத் தெரிவித்துள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), நியூசிலாந்து



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE