தமிழ்நாட்டில் கொரோனா சந்தேகத்தின் அடிப்படையில் மருத்துவ கண்காணிப்பில் இருந்த 17 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து மொத்த பாதிப்பு 67 ஆக அதிகரித்துள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சற்று முன்னர் அறிவித்துள்ளார்.
நேற்று புதிதாக 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து தமிழ்நாட்டில்கொரோனா பாதிப்பு 50 ஆக உயர்ந்திருந்த நிலையில் இன்று இதுவரை 17 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து மொத்த எண்ணிக்கை 67 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா