Friday 26th of April 2024 04:44:52 PM GMT

LANGUAGE - TAMIL
பொது நிர்வாக அமைச்சு
அத்தியாவசியப் பொருட்களைப் பகிருகின்ற அதிகாரம் மாவட்ட, பிரதேச செயலர்களிடம்!!

அத்தியாவசியப் பொருட்களைப் பகிருகின்ற அதிகாரம் மாவட்ட, பிரதேச செயலர்களிடம்!!


பொதுமக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள், மருந்துகளைப் பகிர்ந்தளிக்கும் அதிகாரத்தை மாவட்ட மற்றும் பிரதேச செயலர்களுக்கு வழங்கும் சுற்றுநிரூபமொன்று பொது நிர்வாக அமைச்சால் வௌியிடப்பட்டுள்ளது.

இதற்கிணங்க, குறித்த சேவைகளை வழங்குவதற்காக மாவட்ட ரீதியில் நிறைவேற்று அதிகாரிகளை கொண்ட உதவி அதிகாரிகள் குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது.

அரச மற்றும் தனியார் வர்த்தக நிறுவனங்கள், பல்பொருள் விற்பனை நிலையங்கள் மற்றும் வர்த்தக சங்கங்களின் பங்களிப்புடன் நடமாடும் சேவையை ஏற்பாடு செய்து சகல வீடுகளுக்கும் உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விநியோகிக்கப்படவுள்ளன.

அதற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகளுக்குத் தேவையான ஊரடங்கு சட்ட அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்குப் பொலிஸ் நிலையங்களில் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் பொது நிர்வாக அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE