அவுஸ்திரேலியாவின் தடுப்பு முகாம்களில் உள்ள அகதிகள் கொரோனா வைரஸ் பரவலால் ஆபத்தினை எதிர்நோக்கியுள்ளதாக மருத்துவர்கள் மற்றும் சுகாதார துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனா்.
இந்நிலையில் முகாம்களில் உள்ள அகதிகள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீற்றர் டட்டனிடம் கோரிக்கை விடுக்ககப்பட்டுள்ளது.
சுமார் 1, 183 மருத்துவர்கள் மற்றும் சுகாதார துறையினர் கையெழுத்திட்டு இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி கடிதம் ஒன்றை உள்துறை அமைச்சர் பீற்றர் டட்டனுக்கு அனுப்பியுள்ளனா்.
அகதி முகாம்கள் மாத்திரமல்லாமல் நவுறு தீவிலிருந்து கொண்டுவரப்பட்டு விடுதிகளில் தங்கவைக்கப்பட்டுள்ள அகதிகளும் கொரோனா வைரஸினால் பாதிக்கப்படும் நிலையில் உள்ளார்கள்.
இவர்கள் அனைவரும் உடனடியாக சமூகத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டு உரிய மருத்துவ பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் தொற்றுநோயிலிருந்து ஒவ்வொருவரும் கடைப்பிடிக்கவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளாக அரசு அறிவித்திருக்கும் படிமுறைகள் எதுவும் அகதிகள் முகாமில் சாத்தியமில்லை .முகாம்களில் வழங்கப்படுகின்ற வசதிகள் எதுவும் நோய்க்கால தயார் நிலைக்கு போதுமானது அல்ல என்றும் மருத்துவத்துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), ஆஸ்திரேலியா