இராணுவத்தினரின் கண்காணிப்பின் கீழ், தியத்தலாவை இராணுவ முகாமில் அமைக்கப்பட்டிருந்த கொரோனா தடுப்புக்கான தனிமைப்படுத்தல் மத்திய நிலையம் வெறுமையாகியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மத்திய நிலையத்தில் தங்கியிருந்த அனைவரும் சொந்த இடங்களுக்குத் திரும்பியுள்ளதுடன், இறுதியாக தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகியிருந்த 33 பேரும் இன்று (03) அவரவர் வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.
இந்த நிலையத்தில் வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பிய 479 பேர் இதுவரை தனிமைப்படுத்தலை நிறைவு செய்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
முதன்முதலாக சீனாவிலிருந்து அழைத்து வரப்பட்ட 33 இலங்கை மாணவர்களே இங்கு தனிமைப்படுத்தப்பட்டனர்.