கொரோனா வைரஸ் தொற்றுநோயால் நேற்று பிரான்ஸில் 833 பேர் உயிரிழந்தனா்.
தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து பிரான்ஸில் பதிவான அதிகபட்ச ஒருநாள் உயிரிழப்பு எண்ணிக்கை இதுவாகும் என அந்நாட்டு சுகாதார அமைச்சா் ஒலிவர் வேரன் செய்தியாளர்களிடம் கூறினார்.
நேற்று உயிரிழந்தவா்களுடன் பிரான்சில் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் கொல்லப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 8,911 ஆக அதிகரித்துள்ளதாக வூரன் தெரிவித்தார்.
மருத்துவமனைகள் மற்றும் பராமரிப்பு மையங்கள் என்பவற்றில் இறந்தவா்களின் மொத்த எண்ணிக்கையை பிரான்ஸ் இப்போது தினசரி அறிவித்து வருகிறது. முன்னதாக மருத்துவனை இறப்புகள் மட்டுமே அறிக்கையிடப்பட்டன.
நேற்று பதிவான இறப்புகளில், 605 மருத்துவமனைகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஏனையோர் பராமரிப்பு இல்லங்களில் பலியானவா்களென பிரான்ஸ் சுகாதார அமைச்சா் ஒலிவர் வேரன் கூறினார்.
இதேவேளை, பிரான்ஸில் இன்றுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 98 ஆயிரத்து 10 ஆக அதிகரித்துள்ளது.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), பிரான்சு