Friday 26th of April 2024 04:39:46 PM GMT

LANGUAGE - TAMIL
இம்மானுவேல் மக்ரோன்
பிரான்ஸில் சமூக முடக்கல்  மே-11 வரை நீடிக்கப்பட்டது!

பிரான்ஸில் சமூக முடக்கல் மே-11 வரை நீடிக்கப்பட்டது!


பிரான்ஸில் கொரோனா வைரஸ் தொற்று மற்றும் உயிரிழப்புக்கள் தொடா்ந்துவரும் நிலையில் அங்கு சமூக முடக்கல் உத்தரவு மே 11-ஆம் திகதிவரை நீடிக்கப்படுவதாக அந்நாட்டு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அறிவித்துள்ளார்.

நாட்டில் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால் வைரஸூக்கு எதிரான போரில் நாம் இன்னும் வெற்றிபெறவில்லை என அவா் தெரிவித்தார்.

புதிய கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள ஆரம்பத்தில் பிரான்ஸ் போதுமான அளவு தயாராக இருக்கவில்லை என்பதை ஒப்புக் கொண்ட மக்ரோன், சமூக முடக்கல்களால் தற்போது நோய்த் தொற்று குறைந்து வருவதாகத் தெரிவித்தார்.

தொற்றுநோய் மெதுவாகக் குறைந்து வருகிறது. இதன் முடிவை நோக்கி நாங்கள் நகா்ந்து வருகிறோம் என நேற்று தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றும்போது அவா் கூறினார்.

சமூக முடக்கல் நடவடிக்கைகளை மதித்துச் யெற்பட்டுவரும் நாட்டு மக்களுக்கு அவா் நன்றி தெரிவித்தார்.

ஆனால் இந்த நெருக்கடியை எதிர்கொள்ள நம் நாடு போதுமான அளவு தயாராக இருக்கவில்லை. இதனால் ஏற்பட்டுள்ள விளைவுகளுக்கு நாம் அனைவருமே பொறுப்பாளிகள் எனவும் அவா் கூறினார்.

பிரான்ஸ் சமூக முடக்கல் உத்தரவு நான்காவது வாரமாக நடைமுறையில் உள்ள நிலையில் மக்ரோன் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

உணவுப் பொருட்களை வாங்குவது, வேலைக்குச் செல்வது, மருத்துவ உதவியைப் பெறுவது அல்லது சில உடற்பயிற்சிகளைப் செய்வது போன்ற அவசிய செயற்பாடுகளுக்கு வெளியே வருவதைத் தவிர வீடுகளுக்குள்ளேயே முடங்கி இருக்குமாறு அவா் மக்களைக் கேட்டுக்கொண்டார்.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), பிரான்சு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE