இங்கிலாந்தில் உள்ள வைத்தியசாலைகளில் இன்று 847 போ் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் உயிரிழந்தனா். இன்றைய உயிரிழப்புக்களுடன் அங்கு மொத்த கொரோனா உயிர்ப் பலி 14,576 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த ஐந்து நாட்களாக நாட்டில் 750 முதல் 850 வரை இறப்புக்கள் தினமும் பதிவாகி வருகின்றன. அதற்கு முந்தைய வாரங்களில் இறப்பு எண்ணிக்கை இதனைவிட அதிகமாகப் பதிவாகியிருந்தது.
இங்கிலாந்தில் தொற்றுக்குள்ளாகி உறுதிப்படுத்தப்பட்டவா்களின் எண்ணிக்கையும் இன்று 108,692 ஆக அதிகரித்தது.
இன்று உயிரிழந்தவா்களில் 32 முதல் 101 வயது வரையானவா்கள் அடங்குவதாக பிரித்தானிய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இங்கிலாந்து