ஐபிஎல் தொடரின் சிறந்த பந்து வீச்சாளர் யார் என்றால் அது லசித் மலிங்கதான் என இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐபிஎல் 2020 காலவரையறை இன்றி ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் முன்னாள் வீரர்கள், வர்ணனையாளர்கள் கடந்த கால சிறந்த நிகழ்வுகள் குறித்து பேசிவருகின்றார்கள்.
அந்த வகையில் ஐபிஎல் இன் எல்லா காலகட்டத்திலும் சிறந்த பந்துவீச்சாளர் லசித் மலிங்கதான் என இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார். அது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
என்னைப் பொறுத்த வரைக்கும் மலிங்கதான் சிறந்த பந்து வீச்சாளர். அவர் விளையாடிய போட்டிகளையும், தொடர்ச்சியாக யோக்கர் பந்துகளi வீசியதையும் ஒவ்வொருவரும் கவனித்திருக்கலாம். மலிங்க என்னுடைய பையன்.
நான் சுனில் நரைன் ஐத்தான் தேர்வு செய்திருக்க வேண்டும். ஆனால் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில்தான் அவரால் விக்கெட் வீழ்த்த முடிந்தது. மேலும் அவரது பந்துவீச்சு குறித்து விமர்சனமும் எழுந்தது. அதனால் நரைன் பெயரை சொல்ல தயங்கினேன். மலிங்கவை தேர்வு செய்தேன் என்று மேலும் தெரிவித்திருந்தார்.
Category: விளையாட்டு, புதிது
Tags: இங்கிலாந்து, இலங்கை