உலக விளையாட்டு திருவிழாவான சர்வதேச ஒலிமிபிக் போட்டி கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 2021 இற்கு ஒத்திவைக்கபட்டுள்ள நிலையில் குறிப்பிட்டவாறு 2021 இலும் நடைபெறுவது சந்தேகம் என ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார்.
வரும் ஜூலை-24 தொடக்கம் ஓகஸ்ட்-09 வரை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற எற்பாடாகியிருந்தது. உலகளாவிய கொரோனா அச்சுறுத்தல் நிலை காரணமாக 2021 ஆம் ஆண்டுக்கு ஒலிம்பிக் போட்டி ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
கொரோனா வைரஸ் 2021 இற்குள் கட்டுப்படுத்தப்படாவிட்டால் ஒலிம்பிக் போட்டி ரத்து செய்யப்பட வாய்ப்பிருப்பதாக டோக்கியோ ஒலிம்பிக் குழு தலைவர் யோஷிரோ மோரி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், 2021 ஆம் ஆண்டிலும் ஒலிம்பிக் போட்டி நடைபெறுவது சந்தேகமே என்று ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
கொரோனா வைரஸ் தொற்று நோய் கட்டுப் படுத்தப்படாத வரை டோக்கியோ ஒலிம்பிக் போட்டி அடுத்த ஆண்டு நடைபெறாது. ஜப்பானில் அவசர நிலை தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே ஒலிம்பிக் போட்டியை ஒரு ஆண்டுக்கு தள்ளிவைத்தால் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அதன் தலைவர் தெரிவித்துள்ளார்.
Category: விளையாட்டு, புதிது
Tags: உலகம்