Thursday 25th of April 2024 11:14:48 PM GMT

LANGUAGE - TAMIL
கொரோனா
அவசரகால நிலையை மேலும் 02 மாதங்கள் நீடிக்கிறது பிரான்ஸ்!

அவசரகால நிலையை மேலும் 02 மாதங்கள் நீடிக்கிறது பிரான்ஸ்!


கொரோனா வைரஸ் தொற்றுநோயை அடுத்து பிரான்ஸில் பிரகடனப்படுத்தப்பட்ட சுகாதார அவசர கால நிலையை இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்க பிரான்ஸ் முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சர் ஒலிவர் வாரன் இன்று சனிக்கிழமை தெரிவித்தார்.

ஜூலை 24 வரை அவசரகால நிலையை நீடிக்கும் யோசனை திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.

பிரான்சில் இதுவரை 24,500 க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்று நோயால் இறந்துள்ளனர்.

இந்நிலையில் மார்ச் 17 ஆம் திகதி முதல் நாட்டில் அமுலில் உள்ள கடுமையான கட்டுப்பாடுகளை மே 11 அன்று தளர்த்த நாடு தயாராகி வருகிறது.

தொழிலாளா் தினத்யொட்டி வெள்ளிக்கிழமை உரையாற்றிய பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கட்டுப்பாடுகளைத் தளா்த்துவது என்பது சாதாரண வாழ்க்கைக்கு திரும்புவதைக் குறிக்காது என்று எச்சரித்தார்.

சமூக முடக்கல்களில் இருந்து மெல்ல-மெல்லவே வெளியேற வேண்டும். அதில் ஒரு படியே மே-11 சிறிய தளா்வுகள் என மக்ரோன் கூறினார்.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), பிரான்சு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE