Friday 26th of April 2024 09:36:08 PM GMT

LANGUAGE - TAMIL
கேரளாவில்
கார் விபத்தில் நடிகர் உள்ளிட்ட 3 பேர் பலி!

கார் விபத்தில் நடிகர் உள்ளிட்ட 3 பேர் பலி!


பள்ளிக்கூட சுவரில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் நடிகர் உள்ளிட்ட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

கேரளா மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் நடைபெற்ற இவ் விபத்தில் சிக்கி மலையாள நடிகர் உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

மலையாள படமான உவல்லி என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த எர்ணாகுளம் முபாட்டு புழாவை சேர்ந்த பேசில் ஜோர்ஜ் (வயது-30) தனது நண்பர்களுடன் சென்றோ போதே விபத்திற்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

நண்பர்களான சதீஷ் (வயது 30), அஷ்வின் (வயது-20), எமோன் (வயது-30), ராகவ் (வயது-19), சமர் (வயது-30) ஆகியோருடன் நேற்று (மே-4) முபாட்டு புழாவில் இருந்து வளாகம் நோக்கி காரில் சென்றுள்ளனர்.

இவர்களது கார் வளாகம் அருகே உள்ள அரசு பள்ளி அருகே சென்றபோது கட்டுப்பாடடை இழந்து அங்குள்ள மின்கம்பத்தில் மோதியது. பின்னர் அங்கிருந்த பள்ளி சுவரின் மீது வேகமாக மோதி நின்றது.

இவ்விபத்தில் ஆறுபேரும் பலத்த காயத்துடன் வெளியே வரமுடியாமல் காருக்குள் சிக்கிக் கொண்டனர். இதையடுத்து அயலவர்கள் காவல்துறைக்கு தெரியப்படுத்தியதை தொடர்ந்து தீயணைப்புத் துiயினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து காரில் சிக்கியிருந்தவர்களை மீட்டனர்.

இவ்வாறு மீட்கப்பட்டவர்கள் கோலன்சேரியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி நடிகர் பேசில் ஜோர்ஜ், சதீஷ், அஷ்வின் ஆகிய மூவரும் உயிரழந்துள்ளனர். ஏனையவர்கள் பலத்த காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவம் கேரளாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Category: சினிமா, புதிது
Tags: இந்தியா, கேரளா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE