ஜேர்மனியின் நிதி மையமான பிராங்பேர்ட்டில் உள்ள ஒரு கிறிஸ்தவ தேவாலய வழிபாட்டில் பங்கேற்ற 40 - க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உறுதி செய்யப்பட் டுள்ளதாக பிராங்பேர்ட் நகர சுகாதாரத் துறைத் தலைவர் ரெனே கோட்ஷ்சாக் நேற்று சனிக்கிழமை தெரிவித்துள்ளாா்.
கொரோனா தொற்றுக்குள்ளானவா்களில் பெரும்பாலோர் தீவிர நோய் அறிகுறிகளைப் கொண்டிருக்கவில்லை. எங்களுக்குத் தெரிந்தவரை ஒருவர் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று ரெனே கோட்ஷ்சாக் கூறியுள்ளாா்.
இந்த வழிபாடு மே -10 அன்று நடந்தது என்று நகர சுகாதாராத் துறைத் துணைத் தலைவர் அன்ரனி வால்சோக் பிராங்பேர்டர் என்ற உள்ளூா் பத்திரிகைக்குத் தெரிவித்துள்ளாா்.
இதேவேளை, தேவாலயத்தின் https://www.seidheilig.de என்ற வலைத்தளத்தில் ஜெர்மன் மற்றும் ரஷ்ய மொழிகளில் வழிபாடு இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை பேணியே தேவாலயம் வழிபாடுகளை நடத்தியது என பிராங்பேர்ட் நகர சுகாதாராத் துறைத் துணைத் தலைவர் அன்ரனி வால்சோக் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளாா்.
பிராங்பேர்ட் தேவாலயங்களில் மே- 1 முதல் சமூக இடைவெளி மற்றும் சுகாதார விதிகளைகடைப்பிடித்து வழிபாடுகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), ஜெர்மனி