தமிழ்நாட்டில் இன்றும் (மே-26) புதிதாக 646 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சென்னையில் இன்றும் 509 புதிய கொரோனா தொற்றாளர்கள் இன்று இனம்காணப்பட்டுள்ளனர். இதன் மூலம் சென்னையில் மொத்த தொற்றாளர்களது எண்ணிக்கை 11 ஆயிரத்து 640 ஆக உயர்வடைந்துள்ளது.
இதையடுத்து மொத்த கொரோனா தொற்றாளர்களது எண்ணிக்கை 17 ஆயிரத்து 728 பேராக அதிகரித்துள்ளதாக தமிழ்நாடு சுகாதாரத அமைச்சால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிகிச்சையின் பின்னர் 9 ஆயிரத்து 342 பேர் குணமடைந்துள்ள நிலையில் தற்போது 8 ஆயிரத்து 256 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேவேளை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களது எண்ணிக்கை 127 ஆக அதிகரித்துள்ளது. இதில் 91 பேர் சென்னையில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, தமிழ்நாடு, சென்னை