இந்தியா - சீனா எல்லையில் இரு நாட்டுப் படைகளும் குவிக்கப்பட்டு பதற்ற நிலை ஏற்பட்டுள்ள நிலையில் இந்திய எல்லைக்கு அருகே திபெத்தின் ந-காரி அருகே உள்ள விமான நிலையத்தில் சீனா தனது போர் விமானங்களை நிறுத்தி வைத்துள்ளது.
அத்துடன் அங்கு மேலும் ஒருவிமான ஓடுதளத்தையும் அது அமைத்து வருவது தெரிய வந்துள்ளது.
நகாரி பகுதியில் உள்ள விமான நிலையம் தொடர்பான செயற்கைக்கோள் படங்களை, தனியார் பாதுகாப்பு ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் ஒரு படம், இந்த ஆண்டு ஏப்ரல்- 6 இல் எடுக்கப்பட்டது. மற்றொன்று மே - 21இல் எடுக்கப்பட்டது.
புதிய செயற்கைக் கோள் படத்தில் நகாரி பகுதியில் உள்ள விமான நிலையத்தில் புதிதாக ஒரு ஓடுதளப் பாதையை சீனா அமைத்து வருவது தெரியவந்துள்ளது. நான்கு போர் விமானங்கள், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமையும் அந்தப் படத்தில் தெரிகிறது.